நெருக்கமாக நடித்த போது பாக்யராஜுடன் காதல்?.. மனம் திறந்த வடிவுக்கரசி..!

Author: Vignesh
29 July 2023, 10:30 am
vadivukkarasi-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1979ல் வெளியான கன்னிப் பருவத்திலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இப்படத்தில் வடிவுக்கரசி நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

vadivukkarasi-updatenews360

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். பின்னர் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவுக்கரசி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். குறிப்பாக ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் கிழவியாக நடித்து மிரட்டினார்.

vadivukkarasi-updatenews360

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயண அனுபவங்களை வடிவுக்கரசி பேசியுள்ளார். கன்னிப்பருவத்திலே என்ற படத்திற்காக 30 நாள் ஷூட்டிங்க்கிற்கு, திருச்சிக்கு சென்றதாகவும், தனக்கு டயலாக் எல்லாமே பாக்யராஜ் தான் சொல்லிக் கொடுத்ததாகவும், அப்போது பிரவீனாவுக்கும் பாக்கியராஜுக்கும் காதல் பற்றிய விஷயங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.

Kanni_Paruvathile -updatenewse360

அந்த சமயத்தில், தன்னை பார்க்க வருவது போல் பாக்கியராஜ் பிரவீனாவை பார்பார் என்றும், பாக்கியராஜ் யாராவது ஒரு பெண்ணிடம் பேசினால் உடனே பிரவீனாக்கு சொல்லிவிடும் வேலையை தான் செய்து வந்ததாகவும், தனக்கு மட்டுமே அம்பாசிடர் கார் கொடுத்து அனுப்புவார்கள்.

Kanni_Paruvathile -updatenewse360

அப்போது பாக்யராஜ் சாரை காரில் ஏற்றிக்கொண்டு சென்றபோது பிரவீனாவை பற்றி பேசிக்கொண்டே வருவார். இதை சிலர் ராஜ்கிரன் சாருக்கு கால் செய்து வடிவுகரசியும், பாக்யராஜும் காதல் பண்றாங்க என்று போட்டு கொடுத்து விட்டனர்.

Kanni_Paruvathile -updatenewse360

ஒரு நாள் நைட் ஒரு காட்சி எடுக்கும் போது ராஜ்கிரண் இங்க அவ அவ என் காசுல எல்லோரும் ஹனிமூன் கொண்டாடுறீங்களான்னு கோபத்தில் கேட்டார். உடனே தான் அங்கிருந்த ஷேரை எடுத்து தூக்கி வீசி, கத்தியதால், தன்னை பற்றி அப்போதைய செய்திகளில் வடிவ கரசிக்கு பேய் பிடித்து விட்டதாக சொல்லிவிட்டார்கள். அப்போது அந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது என்று வடிவுக்கரசி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Views: - 489

0

1