பிரபல நடிகையின் ‘பான் இந்தியா’ அந்தஸ்து பறிபோக வாய்ப்பு..? ஏத்தி விட்ட ஏணியை மறக்கலாமா..! வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
25 November 2022, 4:00 pm

நடிகை ராஷ்மிகா, கன்னட திரைப்படங்களில் நடிக்கவும், அவர் நடித்த படங்களை கன்னடத்தில் ரிலீஸ் செய்யவும் தடைவிதிக்கப்பட உள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ராஷ்மிகா.

அப்படம் ஹிட் ஆனதை அடுத்து ராஷ்மிகாவிற்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தெலுங்கில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது அங்கு டாப் நடிகையாக உயர்ந்துவிட்டார் ராஷ்மிகா.

rashmika mandanna - updatenews360.jpg 2.jpg 3

இதுதவிர இந்தியில் 3 படங்கள் தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என பான் இந்தியா நடிகையாக தற்போது பட்டைய கிளப்பி வருகிறார் ராஷ்மிகா. நடிகை ராஷ்மிகா, சமீப காலமாக தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வந்தாலும், தன்னை அறிமுகப்படுத்திய கன்னட திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.

rashmika mandanna - updatenews360.jpg 3

இந்நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா, கன்னட திரைப்படங்களில் நடிக்கவும், அவர் நடித்த படங்களை கன்னடத்தில் ரிலீஸ் செய்யவும் தடைவிதிக்க கர்நாடக திரையரங்க உரிமையாளர்களும், கன்னட திரைத்துறையினரும் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று டுவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

rashmika mandanna -updatenews360

நடிகையாக அறிமுகப்படுத்திய கன்னட திரையுலகை நடிகை ராஷ்மிகா, தொடர்ந்து இழிவு படுத்தி வருவதே இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது கூட தனது முதல் கன்னட படத்தை யார் தயாரித்தது என்றே தெரியாது என்பதுபோல நடிகை ராஷ்மிகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Vaarisu -Updatenews360

நடிகை ராஷ்மிகா மீதான தடை உறுதி செய்யப்பட்டால் அவர் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி இதன்மூலம் அவரது பான் இந்தியா நடிகை அந்தஸ்து பறிபோகவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ள நிலையில், ஒரு சிலர் இது வெறும் வதந்தி என்றும் கூறி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!