சாப்பாடு விஷயத்தில் கடுப்பாக்கிய வனிதா.. திருமணத்தை குறிப்பிட்டு Nosecut செய்த பிரியங்கா..!

Author: Vignesh
3 May 2024, 12:15 pm

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

vanitha vijayakumar

முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள் தான் அனிதா, கவிதா, அருண் விஜய் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் ப்ரீதா, வனிதா, ஸ்ரீதேவி.

vanitha-sisters

மேலும் படிக்க: இந்த போட்டோவில் இருக்கும் CWC பிரபலம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இதனிடையே, வனிதா சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பா விஜயகுமார் தனக்கு சரியாக பாகம் பிரித்து கொடுக்கவில்லை என நடு ரோட்டில் இறங்கி அவரை நாறடித்த செய்தி ஊரெங்கும் பேசப்பட்டது. அன்றிலிருந்து வனிதாவை விஜயகுமார் வீட்டில் இருந்தே ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.

vanitha_updatenews360

அதன் பிறகு திருமணம் குழந்தைகள் என பல வருடங்கள் சினிமா பக்கம் வராமல் இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ், குக் வித் கோமாளி, பிக் பாஸ் கொண்டாட்டம் என தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். இப்போது, சொந்தமாக நிறைய தொழில்கள் தொடங்கி அதிலும் வெற்றிகரமாக முன்னேறி வருகிறார்.

vanitha_updatenews360

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

இந்த நிலையில், வனிதாவிடம் பலரும் கேட்கும் முக்கிய விஷயமாக உள்ளது நாலாவது திருமணம் எப்போது என்பதுதான். அப்படி ஒருவர் திருமணம் குறித்து கேட்க அதற்கு வனிதா, இப்போது தமிழ்நாட்டில் இதுதான் முக்கியமான விஷயமா அப்படி ஒன்று நடந்தால் எதிர்காலத்தில் கண்டிப்பாக கூறுகிறேன் என கூலாக தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க: கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாய்ப்பை விடாத விஜய்..!

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வனிதா மற்றும் வித்தியுலேகா ஆகியோர்கள் பங்கேற்றனர். அப்போது, எல்லோரும் சமைத்து முடித்ததும் சாப்பாட்டை பிரியங்காவிடமிருந்து பத்திரமாக வச்சுக்கோங்க அவர் காலி செய்து விடுவார் என வனிதா கலாய்த்திருந்தார். அப்போது, குறிக்கிட்டு பேசிய பிரியங்கா அதெல்லாம் இருக்கட்டும் நீங்க கல்யாண சாப்பாடு எப்போ போட போறீங்க என கேட்டு பிரியங்கா வனிதாவிற்கு நோஸ்கட் கொடுத்திருந்தார். வேறு வழி இல்லாமல் வனிதா சிரித்து சமாளித்து இருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!