நான் மட்டும் ராஜாவா இருந்தால் அரண்மனைக்கு அவரை கடத்திட்டு போயிடுவேன்.. வெறி கொண்ட விஜய் தேவரகொண்டா!
Author: Udayachandran RadhaKrishnan16 May 2025, 11:52 am
நான் மட்டும் ராஜாவா இருந்தால் என்னுடைய அரண்மனைக்கு அவரை கடத்திக் கொண்டு போய்விடுவேன் என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: திமுகவுக்கு நெருக்கமா? அப்போ அவ்வளவுதான்!- ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் திடீரென புகுந்த அமலாக்கத்துறை!
நடிகர் விஜய் தேவரகொண்டா முன்னணி நடிகராக உள்ளார். மேலும் பான் இந்தியா படங்களில் நடித்து வருவதால் பான் இண்டியா ஸ்டாராக வலம் வருகிறார்.
மகாநதி, கீதா கோவிந்தம், டாக்வி வாலா, குஷி என அடுத்தடுத்து வெற்றியால் தனக்கென தனி இடத்தை பிடித்த விஜய், தற்போது கிங்டம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை மாதம் படம் வெளியாக உள்ளது. இது குறித்த பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய், அனிருத் பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார்.

3 படத்தின் இசை கேட்டு அனிருத் மீது எனக்கொரு அன்பு உருவானது. அந்த சமயம் நான் நடிகராக இல்லை. யார் இந்த மேதை? என எனக்குள்ள கேட்டுக்கொண்டேன்.

நான் நடிகரானால் என் படங்களுக்கு இவர் தான் இசையமைக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. நான் ராஜாவாக இருந்திருந்தால், அனிருத்தை கடத்திக் கொண்டு அரண்மனையில் வைத்து என் படத்துக்கு இசையமைக்க செய்திருப்பேன், பல வருடங்களாக இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.