தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?
Author: Prasad18 June 2025, 7:46 pm
தொடர்ந்து தோல்வி படங்கள்?
கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல் எந்த திரைப்படமும் வெற்றிபெறவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த “வீர தீர சூரன் பார்ட் 2” பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்திரைப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம், இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமானது. இத்திரைப்படத்தின் கதை விவாதம் பல நாட்களாக நடைபெற்று வந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் கதை விக்ரமிற்கு திருப்தியை தரவில்லை என்பதால் அக்கதையை மெருகேற்றி வந்தாராம் மடோன் அஸ்வின்.
ஆனால் அப்பொழுதும் விக்ரமிற்கு திருப்தி ஏற்படவில்லையாம். மேலும் விக்ரம் “தூள்” போன்ற ஒரு பக்கா கமர்சியல் கதையை கொண்டு வாருங்கள் என கூறினாராம்.

ட்ராப் ஆன திரைப்படம்
இந்த நிலையில் தற்போது இது குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மடோன் அஸ்வின்-விக்ரம் கூட்டணியில் ஒப்பந்தமான திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேறு ஒரு இயக்குனரை விக்ரமிற்கு கதை சொல்ல அனுப்ப, அந்த இயக்குனர் சொன்ன கதையையும் விக்ரம் நிராகரித்துவிட்டாராம். மீண்டும் பழைய ஃபார்முக்கு வர பக்காவான கமர்சியல் கதையில் நடிக்க வேண்டும் என விக்ரம் முடிவெடுத்துள்ளதால் தனக்கு வரும் கதைகள் நிராகரித்துவருவதாக கூறப்படுகிறது.
