அர்ச்சனா காசு கொடுத்து தான் டைட்டில் வாங்குனா?.. திட்டமிட்ட சதினு புலம்பும் மாயா..!

Author: Vignesh
16 January 2024, 10:25 am

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் வெற்றிகரமாக முடிவடைந்தது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஆரமபத்தில் இருந்தே மக்களின் மனதை கவர்ந்து பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார் அர்ச்சனா.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றுள்ள அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தனர். அதே போன்றே அவர் டைட்டில் வென்றுள்ளதை நினைத்து ஆடியன்ஸ் எல்லோரும் ஹேப்பி ஆகிவிட்டனர். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு என்றும் அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்து விரைவில் ஹீரோயின் ஆகிடுவார் என்றும் அனைவரும் கூறி வருகின்றனர்.

Maya-S-Krishnan

இந்நிலையில், மூன்றாம் இடத்தை பிடித்த மாயா ஒரு பதிவினை போட்டு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார் அதாவது ஒரு ரசிகை உண்மையான பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் மாயா தான் மக்கள் சாம்பியன் என்று தெரிவித்திருந்தார். அந்த பதிவை மாயா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, கோப்பையை மணி கொடுத்து வாங்கப்பட்டது. ஆனால், காசு கொடுத்து மக்கள் அன்பை வாங்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இதனை நெட்டிசன்கள் மாயாவை கேலி செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Maya-S-Krishnan
  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?