செஞ்ச பாவத்துக்கு பிராய்சித்தமா? அவங்க இல்லாம உங்களால் ஒண்ணும் புடுங்க முடியாது : நயன்தாராவுக்கு பயில்வான் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
29 December 2022, 4:31 pm
Nayam Bayilvan - Updatenews360
Quick Share

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. அவர் நடிப்பில் கடந்த 22 ஆம் தேதி கனெக்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார் நயன்தாரா. திருமணம் முடிந்த 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றதையும் அறிவித்தனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் கமிட் ஆகி வருகிறார் நயன்தாரா. திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் கனெக்ட் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கனெக்ட் படத்தை வச்சு செய்துள்ளார். கனெக்ட் திரைப்படம் எக்ஸார்சிஸ்ட் படத்தின் காப்பிதான் என்று கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன் நடிகை நயன்தாரா குறித்தும் பேசியுள்ளார்.

இந்தப் படம் திருமணத்திற்கு முன்பே எடுக்கப்பட்டதால் நயன்தாரா படத்தில் ஒல்லியாக முகத்தில் களையிழந்து முதிர்கன்னியாக தோற்றமளிக்கிறார் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். மேலும் கனேக்ட் திரைப்படம் கிறிஸ்துவத்தை வலியுறுத்தும் படமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். தீர்க்கப்படாத நோய் கூட கடவுளால் தீர்க்கப்படும் என்று மூட நம்பிக்கையை பேசும் படமாக உள்ளது என்றும் விளாசியுள்ளார் பயில்வான்.

மேலும் கிறிஸ்தவராக பிறந்த நயன்தாரா மதம் மாறி இந்துவான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா அதற்கு பிரயாச்சித்தம் செய்வதற்காக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் பயில்வானன் ரங்கநாதன். எதிர்பார்த்தது இந்த படத்தில் இல்லை என்று கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், நயன்தாரா ஏமாற்றிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயப்படுகிறார் நயன் தாரா. ஆடியோ லான்ச் கூட கனெக்ட் படத்திற்கு நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஒரு நடிகை எதையும் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அப்படி பல பிரச்சனைகளை சமாளிக்கும் நயன் தாரா ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்து வருகிறார். அப்போதைய காலத்தில் நானே பலமுறை கேள்வி கேட்டு இருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க போகும் நயன் தாராவுக்கு பத்திரிக்கையாளர்கள் தயவு தேவை.

பத்திரிக்கையாளர்கள் தயவில்லாமல் எந்த நடிகையும் நடிகரும் வளரே முடியாது. ஐய்யா படத்தில் எப்படி பவ்யமாக நடந்து கொண்டீர்களோ அதே போல் பத்திரிக்கையாளரிடம் தற்போதும் நடந்து கொள்ளவேண்டும் என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

மூடநம்பிக்கையை வளர்க்கும் படம், மூடத்தனத்தின் உச்சமாக கனெக்ட் திரைப்படம் உள்ளது. ரொம்ப சுமாரான படம் தான். இந்தப் படம் கொஞ்சம் கூட கனெக்ட் ஆகவில்லை என்றும் எக்ஸார்ஜிஸ்ட் படத்தை வைத்து தான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை விக்னேஷ் சிவன்தான் தயாரித்திருந்தார்.

வழக்கமாக படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத நயன்தாரா, கனெக்ட் படத்தின் புரமோஷன்களில் மட்டும் பங்கேற்றார். தங்களின் நிறுவனம் தயாரித்த படம் என்பதால்தான் நயன்தாரா புரமோஷன்களில் பங்கேற்றார் என சினிமா வட்டாரத்திலேயே சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நயன்தாரா புரமோஷன்களில் ஈடுபட்டப்போதும் கனெக்ட் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

Views: - 709

2

4