நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம் ; 4 பேர் கைது… சிக்கிய முக்கிய ஆதாரம்.. பின்னணியில் பாஜக எம்பி?

Author: Babu Lakshmanan
13 December 2023, 2:49 pm

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி புகுந்து கலர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், வழக்கம் போல குளிர்காலக் கூட்டத் தொடருக்கான இரு அவைகளும் இன்று காலை கூடியது. அப்போது, மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி எம்பிக்கள் அமரும் பகுதிக்குள் 2 பேர் நுழைந்துள்ளனர்.

மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து கலர் புகைக்குண்டுகளை மர்ம நபர்கள் வீசியதால் பரபரப்பு நிலவியது. எம்பிக்களின் இருக்கைகள் மீது ஏறி குதித்து கூச்சலிட்ட இருவரையும் அவை காவலர்கள் மடக்கி பிடித்தனர். 2 மர்மநபர்கள் அத்துமீறி நுழைந்ததால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இரு மர்ம நபர்கள் மக்களவைக்கு புகுந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

இதனிடையே, நாடாளுமன்றத்திற்குள் புகுந்த சம்பவம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த நீலம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனமோல் ஷிண்டே மற்றும் சாஹர் என்பவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மைசூரைச் சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, இவர்களை பார்வையாளர்களாக அனுமதிக்கக்கோரிய பரிந்துரை கடிதம் கிடைத்தது.

இதனால், அவருக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே, பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

  • actress madhoo talked about forced kiss scene while she was acting as a heroine வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!