கேரளாவில் நள்ளிரவில் நடந்த கார் விபத்து… 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 11:29 am
Kerala
Quick Share

கேரளாவை நள்ளிரவில் நடந்த கார் விபத்து… 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கண்ணூர் மாவட்டம், செருகுன்னு அருகே உள்ள புன்னச்சேரியில் திங்கள்கிழமை இரவு 10.45 மணியளவில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற காசர்கோடு காலிச்சநடுக்கம் சாஸ்தம்பாறையைச் சேர்ந்த கே.என்.பத்மகுமார் (59), சூரிக்காட் சுதக் என்பவர் உயிரிழந்தனர்.

பீமநதியைச் சேர்ந்த சுதாகரனின் மனைவி அஜ்தா(35), இவரது தந்தை கொழும்மாள் கிருஷ்ணன்(65), அஜிதாவின் தம்பி அஜித்தின் மகன் ஆகாஷ்(9).இந்த விபத்து திங்கள்கிழமை இரவு செருக்குன்னு அருகே உள்ள புன்னச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே நடந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒன்பது வயது ஆகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: போதையில் தலை, கால் புரியாமல் மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை.. அலறிய செவிலயர்கள் : ஷாக் VIDEO!

காஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி மங்களூருவில் இருந்து வந்து கொண்டிருந்தது. சுதாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், தனது மகன் சவுரவ் கல்வி நிறுவனத்தில் சேர்த்துவிட்டு மீண்டும் காசர்கோடு சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.

Views: - 272

0

0