5 மண்டலங்களாக பிரியும் பெங்களூர்: கிரேட்டர் கவர்னன்ஸ் மசோதா; ஒப்புதல் அளித்த கர்நாடக அமைச்சரவை

Author: Sudha
23 July 2024, 9:28 am

பெங்களூரை 5 மண்டலங்களாக பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன் வைக்கப்பட்ட கிரேட்டர் கவர்னன்ஸ் மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மண்டலங்களின் பிரிவு நகரத்தின் புவியியல் அடிப்படையில் அமையும்.


பெங்களூருவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த பிரிவு இருக்கும்.
கர்நாடகா அரசு, பெங்களூருவின் குடிமை அமைப்பை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய என ஐந்து மண்டலங்களாகப் பிரிக்க வாய்ப்புள்ளது.

மாநில அமைச்சரவை நேற்று கிரேட்டர் பெங்களூரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது, நகரின் நகராட்சி அமைப்பை மறுசீரமைப்பதில் காங்கிரஸ் அரசாங்கம் ஆர்வமாக இருப்பதால், நடந்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த மசோதா, முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.பாட்டீல் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…