ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள்…. அதானி குழுமம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2023, 8:26 pm

ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் முடிந்து, மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. வருகிற புதன்கிழமைக்குள் பணிகள் நிறைவடைந்து, ரெயில்களை மீண்டும் இயக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஒடிசா ரெயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கான பொறுப்பை ஏற்க எங்களுடைய குழுமம் முடிவு செய்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த விபத்து செய்தி தன்னை மனதளவில் ஆழ பாதித்து உள்ளது என தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வலிமையை வழங்க வேண்டியது மற்றும் அவர்களின் குழந்தைகளின் வருங்காலம் சிறக்க செய்ய வேண்டியதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பு ஆகும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…