வரும் 28ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் : மீண்டும் தலைவராகிறாரா ராகுல் காந்தி..?

Author: Babu Lakshmanan
24 August 2022, 1:10 pm

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தற்போது இருந்து வருகிறார். வயது மூப்பு மற்றும் கட்சியில் பல்வேறு எதிர்ப்புகள் போன்ற காரணங்களால் அவர் அந்தப் பொறுப்பில் நீடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அக்கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக்கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!