அரிவாளால் வெட்ட முயன்ற நபரை தனியொரு ஆளாக மடக்கி பிடித்த போலீஸ் அதிகாரி… வைரலாகும் துணிச்சலான செயல்…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
18 June 2022, 11:22 am
Quick Share

தன்னை அரிவாளால் வெட்ட முயன்ற நபரை தனியொரு ஆளாக நின்று மடக்கி பிடித்த போலீசாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்து வருவதைப் போலவே, போலீசார் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் ஒன்ற அரங்கேறியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு கடை முன்பு இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் அமர்ந்து இருக்கிறார். அவருக்கு பின்பாக, போலீஸ் வாகனம் நிற்கிறது. அந்த நபர் போலீஸ் வாகனத்தை பார்த்ததும் தனது பைக்கை எடுத்துச் செல்ல முயல்கிறார். ஆனால், சுதாரித்துக் கொண்ட போலீசாரும், ஜீப்பை முன்னோக்கி எடுக்கிறார்.

இதனால், பதறிப்போன அந்த நபர் தனது பைக்கில் இருந்த அரிவாளை எடுத்து, அந்த ஜீப்பில் இருந்த போலீஸ் அதிகாரியை வெட்ட பாய்கிறார். அப்போது, சுதாரித்துக் கொண்ட அந்த போலீஸ் அதிகாரி, ஜீப்பில் இருந்து சட்டென இறங்கி, அந்த நபரை மடக்கி பிடிக்க முயற்சிக்கிறார். அந்த சமயம் அந்த நபர் இருமுறை அரிவாளால் வெட்டுகிறார்.

இருப்பினும், தொடர்ந்து போராடிய போலீஸ் அதிகாரி, அந்த நபரை கீழே தள்ளி, பின்னர் கத்தியை பிடுங்கிறார். பின்னர், சக போலீஸ் அதிகாரி மற்றும் பொதுமக்கள் அந்த நபரை பிடிக்க உதவி செய்கின்றனர்.

தனி ஒரு மனிதனாக, ஆயுதத்துடன் தாக்க வந்த நபரை எதிர்த்து நின்று மடக்கி பிடித்த போலீசாரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதேவேளையில், இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பகிர்ந்ததால், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 635

0

0