கை, கால்களை கட்டிப்போட்டு 14 வயது சிறுமி பலாத்காரம்… தேயிலை தோட்டத்தில் 2 நாட்கள் அரங்கேறிய கொடூரம்!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 9:42 am

தேயிலை தோட்டத்தில் 14 வயது சிறுமியை கை, கால்களை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திப்ரூகார் மாவட்டத்தில் லகோவால் நகரில் பெபேஜியா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 3ம் தேதி காணாமல் போகியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரணை நடத்தினார். அத்தபாரி தேயிலை தோட்டத்திற்குள் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சுய நினைவின்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, பைஜான் அலி என்பவர் மீது அளிக்கப்பட்ட கடத்தல் புகாரின் பேரில், அவரிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்ததுள்ளது.

கூட்டாளிகள் 2 பேர் பைஜானுக்கு மதுபானம் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர், சிறுமியை பைஜான் கடத்தி சென்று, தேயிலை தோட்டத்தில் வைத்து, கை, கால்களை கட்டி போட்டு 2 நாட்களாக பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, குற்றவாளி பைஜான் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த போலீசார், அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா..? என்ற சந்தேகம் போலீசாரிடையே எழுந்துள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?