காதலியை நம்பி ஏமாந்த காதலன் : 6 குழந்தைகளை பெற்ற பிறகும் பழிதீர்க்க காதலன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2022, 2:17 pm
Woman Murder Attempt - Updatenews360
Quick Share

ஹைதராபாத்தில் நேற்று பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த திருமணமான பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் சையத் நசுரூதீன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பார்த்தபஸ்தியில் உள்ள ஹபீஸ் பாபா நகரில் உள்ள பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 48 வயதுடைய சையத் நூர்பான் என்ற அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சையத் நசுரூதீனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவில் ஒரு ஆண், பர்தா அணிந்த பெண்ணை துரத்தி செல்வதையும், பின்னால் இருந்து நீண்ட கத்தியால் தாக்குவதையும் காணலாம்.

இதில், அவர் நிலைகுலைந்த பிறகும் நிற்காமல், மக்கள் திகிலுடன் பார்த்து கொண்டிருக்க, அவரைத் தொடர்ந்து கத்தியால் குத்துகிறார். அந்த வழியாகச் சென்றவர்களில் ஒருவர் அருகில் செல்ல முயன்றபோது, ​​தாக்குதல் நடத்தியவர் அவர் மீது கத்தியைக் காட்டி, அவரை பின்வாங்கச் செய்தார். மக்கள் பலர் அதிர்ச்சி குலையாமல் அப்படியே உறைந்து நின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த சம்பவம் தொடர்பாக கஞ்சன்பாக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆறு குழந்தைகளின் தாயான அவர் தனது அண்டை வீட்டில் வசித்து வரும் முன்னாள் காதலன் சையத் நசுரூதீனால் துன்புறுத்தப்படுவதாகவும்,அவர் சையத் நூர்பானை பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து கடந்த ஆண்டு சையத் நசுரூதீன் மீது போலீசில் புகார் அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

நடுரோட்டில் படடப்பகலில் பெண் ஒருவரை குத்திச்சென்றது காண்போரை கதிகலங்கச் செய்தது. இந்த வீடியோ பார்த்த பலர் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

Views: - 574

0

0