சரியும் விக்கெட்டுகள்.. தனியாக போராடும் கேஎல் ராகுல்.. வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பும் இந்திய வீரர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2022, 2:09 pm
ind vs ban - Updatenews360
Quick Share

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இன்ற நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சொதப்பல் ஆட்டத்தை ஆடி வருகிறது. குறிப்பாக ஷகிப் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

இந்திய வீரர்கள் ரோகித் ணர்மா, 27 ரன்னுடன் அவுட் ஆக, தவா 7 ரன்னில் வெளியேறினார். கோலி 9 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்னிலும் வெளியேற, கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை ஆடி வருகிறார்.

ஆனால் அவருடன் ஜோடி போட முடியாமல் எதிர்திசையில் வரும் வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி வருகின்னறனர். இந்தியா தற்போது 35 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Views: - 296

0

0