‘அண்ணனும், அம்மாவும் திட்டுவாங்க’… காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்… பயத்தில் 10ம் மாணவி செய்த செயல்!!

Author: Babu Lakshmanan
29 September 2023, 8:51 am

புதுக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட ஆதித்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அனுஸ்ரீ (14). இவர் மேலபட்டு அருகில் உள்ள பிள்ளைகள் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தற்போது நடந்த காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பதாக, அவரது அண்ணனும் தாயாரும் திட்டுவார்கள் என்ற பயத்துடன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இரவு யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரைப் பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறினர். அந்த மாணவி தன் கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.

அதில், ‘என் தந்தை சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். நான் காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளேன். அதனால் என் அண்ணனும் என் அம்மாவும் என்னை திட்டுவார்கள். அதனால் தான் இந்த முடிவு,’ என்று எழுதி வைத்துள்ளார். இது குறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!