இறந்த மகனை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த தாய் : கடவுள் போல வந்த சமூக ஆர்வலர்… நெகிழ வைத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 12:36 pm

இறந்த மகன் அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த தாய் – அடக்கம் செய்த சமூக சேவை அறக்கட்டளை உதவிய சமூக ஆர்வலர்

திருச்சி புத்தூர் பகுதியில் பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துபவர்கள் பலர் உள்ளனர். அதில் மூதாட்டி மாரியம்மாள் மகன் விஜயராமன் மாற்றுத்திறனாளி.

இடது முழங்காலிற்கு கீழ் கால் இல்லாமல் இரண்டு ஊன்றுகோலுடன் தாயும், மகனும் புத்தூர் பகுதியில் பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி சாலை ஓரங்களிலேயே உண்டு உறங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று விஜயராமன் உடல்நலம் குன்றி இறந்தார். மகன் இறந்த சோகத்தில் மூதாட்டி அடக்கம் செய்ய வசதி இல்லாமல் பிரேதத்துடன் இருந்துள்ளார்.

இதனை கண்ட அரசு மருத்துவமனை காவல் துறையினர் மேற்கண்ட நபர் குறித்து விசாரித்து அவரது நல்லடக்க உதவிக்கு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்க்கு தகவல் அளிக்க பெற்ற மகன் நல்லடக்கத்திற்கு தவித்த தாய்க்கு உறுதுணையாக இருந்து உரிய மரியாதையுடன் திருச்சி குலிமிக்கரை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!