கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை செய்த இளைஞர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி : அலட்சியமாக இருந்த போலீஸ்?!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2025, 12:47 pm

கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நேற்று இரவு சுமார் 11 மணி அளவில், நபர் ஒருவர் காவல் நிலையத்துக்குள் நுழைந்து , முதலாவது மாடியில் உள்ள (க்ரைம்) குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் அறைக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை வந்த காவல் துறையினர் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பின்னர் தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகள், தடயங்களை பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தற்கொலை செய்த நபர் யார் ? என்ன ? காரணத்தால் தற்கொலை முடிவை எடுத்தார் ? என்பதனைத் தெரிந்து கொள்ள, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் விசாரணையில் நடத்தினார்.காவல் நிலையத்திற்கு உள்ளேயே புகுந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கும் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே ராஜன் என்ற அந்த நபர், பேருந்தில் இறங்கி வந்து, காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுக்க வந்ததும், பின்னர் யாரும் பார்க்காத நேரத்தில் மாடிப்படி ஏறி குற்றப்பிரிவு காவல் அதிகாரி அறைக்கு சென்றது பதிவாகியிருந்தது.

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியதாவது, உயிரிழந்த நபர் ராஜா , பேரூர் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உதவி ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும். பணியில் இருந்த காவலர்கள் விசாரணை நடத்தி , கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையத்தில நடைபெற்ற தற்கொலை தான் இது.. லாக்கப் டெத் கிடையாது என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!