மருதமலை வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்… அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2023, 10:37 am

கோவை மாவட்டம் மருதமலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று கல்வீரம்பாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யானை ஊருக்குள் வந்ததை அடுத்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை அடர் வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர்.
அதன் பின்னர் யானையை அடர் வனப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்திற்கு விரட்டினர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!