காலி இருக்கைகளைப் பார்த்து உரையாற்றிய அமைச்சர் ஐ.பெரியசாமி : சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சோதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2023, 9:46 pm

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணை சாலை பிரிவில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வீட்டின் முன்பாக நடைபெற்ற ‘திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த கூட்டம் மாலை 6.30க்கு தொடங்கியது. பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஒரு சில மக்களும் சாரல் மழை தொடங்கியதும் அவரவர்கள் வீட்டை நோக்கி நடையை கட்ட தொடங்கினர்

இதனால் பொதுக்கூட்ட மேடையை தவிர்த்து கீழே உள்ள ஆயிரம் நாற்காலிகளும் காலியாகி ஆட்களே இல்லா பொதுக்கூட்டமாக மாறியது.

இந்நிலையில் திமுக அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை குறித்து அமைச்சர் பேசத் தொடங்கியதும் நின்றிருந்த ஒரு சில மக்களும் மழையின் காரணமாக தங்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்

பொதுமக்கள் யாரும் இல்லாத நிலையிலும் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் அமைச்சர் பெரியசாமி திமுகவின் சாதனைகளையும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பெருமைகளையும் நான் கூறாமல் செல்ல மாட்டேன் என்று உறுதியோடு ஸ்டாலினை பெருமைகளையும் மேடையில் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் உரையாற்றினார்.

மேலும் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வீட்டின் முன்பாக நடைபெற்ற இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஆட்கள் வராமல் இருப்பது திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது

மேலும் யாருமே இல்லாத கூட்டத்தில் மேடையில் நின்று யாரிடம் அமைச்சர் பேசுகிறார் என்று ஆண்டிபட்டி மக்கள் நகைத்துச் சென்றனர்

  • adhik ravichandran salary details leaked for next film with ajith kumar அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!