இபிஎஸ், அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜூனா… அதிர்ச்சி வீடியோவால் அரசியலில் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan31 May 2025, 6:59 pm
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஆதவ் அர்ஜூனாவும், புஸ்ஸி ஆனந்தும் நடந்த படி பேசி செல்கின்றனர். அப்போது எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத்தயாராக இல்லை என தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகிறார்.
இதையும் படியுங்க: திருச்செந்தூர் கடலில் குளிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து? பக்தர்கள் பரபரப்பு புகார்!
மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தவெகவின் கல்வி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது இருவரும் உரையாடிய வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அண்ணாமலை 10 பேரை வெச்சிட்டு 20%, 19 % ஓட்டு வாங்குவாறாமா? என சிரித்தபடி கிண்டலாக பேசிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளரா் ஆதவ் அர்ஜுனா#Trending | #admk | #TVK | #aadhavarjuna | #viralvideo | #updatenews360 | #Edappadipalanisami pic.twitter.com/WqzbDawcTF
— UpdateNews360Tamil (@updatenewstamil) May 31, 2025
இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, புரணி பேசுவதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா? ஆதவ் அர்ஜூன என்னை அதிமுக கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். துணை முதலம்சசர் பதவியும் தருகிறோம் என கூறியதாக சீமான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.