“ஓட்ட,ஒடசலான பேருந்துகள வச்சுக்கிட்டு இதெல்லாம் தேவையா?”திமுக அரசை சாடிய இபிஎஸ்!

Author:
19 June 2024, 2:26 pm

தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ள அறிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி x தளத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ஒப்பந்த அடிப்படையில் தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியை விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறை கோரியுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

புதிய பேருந்துகள் எதையும் கொள்முதல் செய்யாமல், ஓட்டை ஒடிசலான பேருந்துகளால் ஏற்கனவே போக்குவரத்துத் துறையை அதளபாதாளத்திற்கு தள்ளிய இந்த விடியா திமுக அரசு, போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு படியாகத் தான் தற்போது ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களை தனியார் வசம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்வதுடன், போக்குவரத்துக் கழகத்தை தனியார்வசமாக்கும் எவ்வித முயற்சியாக இருப்பினும் அதனை கைவிட்டு,
முறையாக பணியமர்த்தி, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பை சீர்செய்து பொதுமக்களுக்கு பயண “சேவை”யை வழங்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!