மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா : தனியார் மருத்துவமனையில் அனுமதி!!
24 September 2020, 11:47 amசென்னை : கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகிய அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. ஓரளவு தொற்று குறைந்து வந்தாலும் கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள், வியாபாரிகள், பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா உறுதியான கே.எஸ்.விஜயகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.