ஒரே நாளில் குவியும் ஒட்டுமொத்த அதிமுக வேட்பாளர்கள்.. எடப்பாடி பழனிசாமி போட்ட பிளான்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2024, 1:42 pm

ஒரே நாளில் குவியும் ஒட்டுமொத்த அதிமுக வேட்பாளர்கள்.. எடப்பாடி பழனிசாமி போட்ட பிளான்..!!!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 27ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெறப்படவுள்ளது.

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாலர்கள் அனைவரும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். அதன்படி தேர்தலில் போட்டியிடும் 33 தொகுதி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?