அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தால் ஜெயித்திருப்போம்.. மகனும், மருமகளும் காலில் விழுந்துது கெஞ்சினர் : ராமதாஸ் பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan29 May 2025, 1:15 pm
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமீப காலமாக மோதல் அதிகரித்து வருகிறது. இன்று ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தது பாமகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி நான் தவறு செய்துவிட்டேன். என்ன தவறு செய்தேன் என மக்கள் மத்தியில் அன்புமணி பேசினார். என்னை குற்றவாளி ஆக்கிவிட்டார். அவருக்கு நான் பதில் சொல்லிதானே ஆக வேண்டும்.
இதையும் படியுங்க: முதலமைச்சர் வரும் நேரத்தில் அமைச்சர் பிடிஆருக்கு நெருக்கமானவர் கட்சியில் இருந்து நீக்கம்… அதிர்ச்சியில் மதுரை திமுக!
ஒளிவு மறைவின்றி நான் அப்படியே சொல்ல விரும்புகிறேன், புதுச்சேரி பொதுக்குழுவில் என்ன நடந்தது என்று உலகமே பார்த்தது. மேடை நாகரிகத்தை கடைபிடிக்காதது யார்? காலை ஆட்டிக்கொண்டிருந்தது சரியா?

தலைமை பண்புக்கு கொஞ்சம் கூட அன்புமணிக்கு இல்லை, வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்துவிட்டது. அழகான கட்சியை கண்ணாடி போல இருந்த கட்சியை நொடியில் உடைத்துவிட்டார் அன்புமணி.
முகுந்தன் விவகாரத்தில் அன்புமணியில் அவரது தாய் பேசிய போது பாட்டிலை கொண்டு தாக்க முயன்றார். மேடையில் மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறைதான்.
4 சுவதற்றுக்குள் பேச வேண்டியதை நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டார். நான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய போது நிர்வாகிகளுக்கு போன் செய்து வராமல் தடுத்துவிட்டார்.
வெறும் 8 மாவட்ட செயலாளர்கள் நான் அழைத்த கூட்டத்திற்கு வந்ததை பார்த்து அன்றே நான் செத்துவிட்டேன், அன்புமணி கூறிய பொய்யை நம்பி யாரும் வரவில்லை.
நான் அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என அன்புமணிக்கு கடிதம் எழுதினேன், அதில் நீயே எடப்பாடியிடம் பேசு என கைப்பட எழுதினேன்.
அன்புமணியும் எடப்பாடியிடம் பேசினார், எடப்பாடியும் சிவி சண்முகத்திடம் பேசி அவரு சொல்றது மாதிரி பண்ணிவிடு என கூறினார். ஆனால் பாஜகவுடன் கூட்டணி போட வேண்டும் என அன்புமணியும் சௌமியாவும் என் காலில் விழுந்து கெஞ்சினர்.
அதிமுகவுடன் கூட்டணி போயிருந்தால் 3 இடமாவது ஜெயித்திருப்போம். அதிமுகவும் 6 அல்லது 7 இடங்களை வென்றிருக்கும். அதிமுக – பாமக இயற்கையான கூட்டணி. பாஜக உடன் கூட்டணி வைக்க நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் நீங்கள்தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என அன்புமணி கூறினார்.
நான் வேறு வழியின்றி அவர்கள் வழிக்கு சம்மதித்தேன், உடனே பாஜகவுடன் கூட்டணி என்ற ஏற்பாட்டை சௌமியா செய்ய, அண்ணாமலையுடன் பேசி ஒப்பந்ததும் போட்டனர். காலையில் வாசலில் பாரத் மாதா கீ ஜே என கேட்கிறது. அண்ணாமலையும் வந்துவிட்டார், விருந்து சாப்பாடு எலலாம் தடல்புடலாக நடக்கிறது. இது எனக்கு தெரியாமலயே நடந்தது. இன்னும் பல கதைகள் இருக்கு. அதெல்லாம் இப்போது தேவையில்லை என ராமதாஸ் கூறினார்.