லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை… கருவூல அதிகாரி கைது : கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2024, 11:27 am

ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்ட கருவூல அதிகாரி ஏ ராஜா.

கோவை கிக்கானி உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர்.

கடந்த மே மாதம் 31ஆம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் கிராஜுவிட்டி தொகையை பெறுவதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தின் கல்வி பிரிவில் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் அணுகியுள்ளார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இந்த நிலையில் அங்கு இருந்த ஏ.ராஜா என்ற அதிகாரி பீட்டர் இடம் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஏ டி எஸ் பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் இடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: இதுக்கு ஒரு முடிவே இல்லையா? ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!

அதனைத் தொடர்ந்து சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலப் பிரிவின் கல்வி அதிகாரியாக உள்ள ராஜாவை நாடியுள்ளார்.

அதனை தொடர்ந்து ராஜா அந்த பணத்தை தனது மேஜை டிராயரில் வைக்குமாறு கூறியுள்ளார் அதனைத் தொடர்ந்து சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் அவ்வாறே 2000 ரூபாய் பணத்தை மேஜை டிராயரில் வைத்துள்ளார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில்

இந்த நிலையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து 2000 ரூபாய் பணத்தையும் கைப்பற்றி லஞ்சம் வாங்கிய அதிகாரி ஏ ராஜாவை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!