பாபா வங்கா கணிப்பு நிஜமாகிறதா?நிலநடுக்கம், சுனாமி குறித்து முன்கூட்டியே கணிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2025, 3:59 pm

இன்று ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.7 என்ற ரிக்டர் அளவில் பதிவானதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதன் தாக்கமாக ஜப்பான் வடக்கு பகுதியினா ஹொக்கைடோ மற்றும் ரஷ்யாவின் குரில் தீவுகளில் சுனாமி அலை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1952ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அமெரிக்கா, ஹவாய், நியூசிலாந்து, பிலிப்பனைஸ், பெரு நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டன.

சுமார் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களிகுக் செல்ல ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தன. ஃபுகுஷிமா அணுமின் நிலைய தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் ஏற்கனவே இப்படி ஒரு நிகழ்வு ஏற்படும் என ஜப்பானின் புதிய பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதன்கிழமை, ஜூலை 30, 2025, மதியம் 3:41 மணி நிலவரப்படி, ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, அதனால் ஏற்பட்ட சுனாமி தாக்குதல் உலகை பதற வைத்துள்ளது.

Baba Vanga's predictions coming true.. Earthquake and tsunami predictions in advance!

இந்த சம்பவம், ஜப்பானின் “புதிய பாபா வங்கா” என்று அழைக்கப்படும் டட்ஸ்கியின் 1999-ஆம் ஆண்டு மங்கா புத்தகமான “The Future I Saw”வில் குறிப்பிடப்பட்ட தெற்கு ஜப்பானைச் சுற்றியுள்ள கடல்களில் ஜூலை 5, 2025 அன்று சுனாமி ஏற்படும் என்பதை நினைவுபடுத்தியுள்ளது.

ஜூலை 5 அன்று பெரிய பூகம்பம் ஏற்படவில்லை என்றாலும், இந்த மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் டட்ஸ்கியின் கணிப்பு தேதியில் சிறு மாற்றத்துடன் நடக்கலாம் என பலரை யோசிக்க வைத்துள்ளது.

கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4 மீட்டர் உயர சுனாமி அலைகளை உருவாக்கியது, இதனால் கடற்கரைகளில் பெரும் சேதம் ஏற்பட்டது.

கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். சுனாமி ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் ஹோக்கைடோவை தாக்கியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

ஜப்பான், அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜப்பானிய சமூக ஊடகங்களில் #July5Disaster ஹேஷ்டேகுடன் தீவிரமாக பரவி வருகிறது.

ரஷ்ய அதிகாரிகள் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளனர், ஆனால் இதுவரை உயிரிழப்புகள் அல்லது பெரிய காயங்கள் பதிவாகவில்லை. டட்ஸ்கியின் கணிப்பு துல்லியமாக நடக்கிறதா என்பது குறித்த விவாதம் இப்போது பரவலாக உருவெடுத்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!