அண்ணாமலை தலைமை மாறிய பின்பு பாஜக ஐடி விங் ஓய்வில் உள்ளது : கார்த்திக் சிதம்பரம் எம்பி விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan31 May 2025, 1:40 pm
சிவகங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நாங்கள் விண்ணப்பமும் வைக்கவில்லை காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை எங்களுக்குக்குள் நல்ல உறவு இருக்கிறது கார்த்தி ப சிதம்பரம்
நகை கடன் விதிமுறை தளர்வு குறித்து RBI இரண்டு விதமாக தெரிவித்துள்ளார்கள் முதலில் நகை கடனில் அசலை முழுமையாக கட்ட வேண்டும் அடுத்த நாள் மறுபடியும் அடகு வைத்துக் கொள்ளலாம் என்றும் நகைக்கான ரசீது காட்ட வேண்டும் என்பது அபத்தம், மத்தியில் ஆளும் அரசாங்கம் அடித்தட்டு மக்களோடு எந்தவிதமான பழக்கமும் இல்லாமல் அவர்களது வாழ்க்கை எவ்வாறு நடக்கிறது என்று கூட தெரியாமல் இருப்பவர்கள் ஆட்சி செய்வதால் தான் அபத்தமான விதிமுறைகளை விதிக்கிறார்கள் என்றார்.
தற்பொழுது ஆறு மாதம் தள்ளி வைத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள் விதிமுறைகளை முழுமையாக தளர்த்த வேண்டும் என்றார்..

பாமக குறித்த கேள்விக்கு அரசியல் ரீதியான கொள்கை ரீதியான பிளவு அல்ல அது குடும்ப பிரச்சனை,குடும்ப பிரச்சனைக்கு பதில் சொல்ல முடியாது என்றார். திருக்குறள் ஆன்மீகம் சார்ந்தது என ஆளுநர் ரவி கூறியது ஆன்மீகம் கருத்து இருக்கிறது என்பது உண்மை,ஆனால் ஆளுநர் ரவி சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது வம்பு சண்டைக்கு போககூடிய ஆளுநர் ஆக பார்க்கிறேன் என்றார். தேர்தல் நேரத்தில் பணம் கொடுக்கபடுவது குறித்த கேள்விக்கு, ஏற்கனவே மோடி பணத்தை ஒழித்து ஆன்லைனுக்கு கொண்டு போய்விட்டார் என்றவர் தமிழ்நாட்டு அரசியலில் செலவு அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும் எந்த அரசியல் கட்சியும் இதில் விதிவிலக்கு இல்லை என்றார்.
அண்ணாமலை தலைமை மாறிய பின்பும் பாரதிய ஜனதா கட்சிக்கு கிரவுண்டில் சப்போர்ட் இல்லை சுறுசுறுப்பா செயல்பட்ட BJP IT Wing தற்பொழுது ஓய்வு எடுக்கிறது . அவர்களது ஓட்டு வங்கியில் எந்த வித மாற்றமும் இல்லை என்றார் .
அண்ணா திராவிட முன்னேற்றகழக தொண்டன் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை விரும்பவில்லை 2021-ல் கூட்டணி வைத்தார்கள் என்ன ஆனார்கள். வெற்றி பெறவில்லை பிரிந்து வந்தார்கள் ஓராண்டில் என்ன நடந்தது. அதிமுக சாதாரண அரசியல் கட்சி அல்ல பெரிய அரசியல் கட்சி .

இரட்டை இலைக்கு என்று தனி வாக்கு வங்கி உண்டு.அடிப்படை மாற்றங்கள் ஏதும் இல்லாத நிலையில் அடிமட்ட தொண்டர்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை என்றார்.
தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று கமல் கூறியது குறித்தான கேள்விக்கு எல்லா மொழிக்கும் சிறப்பு உண்டு. காவியம், இதிகாசம் உண்டு, எந்த மொழியில் இருந்து எந்த மொழி வந்தது என்று ஆராய்ச்சிக்கெல்லாம் நான் செல்ல விரும்பவில்லை என்றார்.

இளைய காமராஜர் என விஜய்யைஅக்கட்சியினர் சொல்வது குறித்தான கேள்விக்கு காமராஜரின் தகுதியை எளிதாக அடைய முடியும்என்று நினைப்பவர்களுக்கு சரித்திரமும் தெரியாது அவரது பெருமையும் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும் என்றார்.
