”கருவில் கரு”.. உலகிலேயே மிகவும் அரிதான சம்பவம் : மருத்துவர்கள் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2025, 6:56 pm

32 வயதான கர்ப்பிணிக்கு கருவில் ஒரு கரு இருப்பது மருத்துவ உலகில் பேசு பொருளாகியுள்ளது.

மகாராஷ்டிரா புல்தானா பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில், 32 வயது கர்ப்பிணிக்கு சோனாகிராபி செய்து பார்க்கப்பட்டது. அப்போதுக கர்ப்பிணியின் கருவில் இருந்து கருவிற்கு இன்னொரு கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படியுங்க: துக்க நிகழ்வில்கூட பங்கேற்க தடை? திருமா திமுக பற்றி கூறியது உண்மைதானா?

ஆச்சரியமடைந்த மருத்துவர் மற்றொருமுறை உறுதி செய்ய வேறு மருத்துவரிடம் ஸ்கேனை காட்டியுள்ளார். இதுகுறித்து கர்ப்பிணிக்கு சிகிச்சையளித்த மருத்துவர், இதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர் மீண்டும் உற்று நோக்கிய போது கருவிற்குள் இன்னொரு கரு வளர்ச்சியடையாமல் இருந்தது தெரிந்தது.

இரண்டு மருத்துவர்களிடம் இதை காண்பித்து மீண்டும் உறுதி செய்துகொண்டேன். இது மிகவும் அரிதான நிகழ்வு, உலகிலேயே 200 சம்பவங்கள் தான் இப்படி நடந்துள்ளது. 9வது மாதம் வரை கர்ப்பிணிக்கு ஸ்கேனில் எதுவும் தெரியாத நிலையில், தற்போது இந்த கரு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Pregnant Infant Found

கருவில் இருக்கும் கருவை என்ன செய்யலாம் எனப்து குறித்து கர்ப்பிணியிடம் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுப்பதாக கூறினார்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…