கோவையில் பிரபல உணவகத்தில் ஐ.டி. ரெய்டு.. வரி ஏய்ப்பு செய்த புகாரின் பேரில் அதிகாரிகள் அதிரடி!!

Author: Babu Lakshmanan
28 May 2022, 10:18 am

கோவையில் பிரபலமான ஸ்ரீ ஆனந்தாஸ் உணவகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்ரீஆனந்தாஸ் குழும உணவகம் நெல்லை மற்றும் கோவை மாவட்டத்தில் கிளை உணவகங்களை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக ஸ்ரீ ஆனந்தாஸ் குழுமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை வடவள்ளி, காந்திபுரம், ராம்நகர், லட்சுமி மில்ஸ், அவினாசி சாலை, சுந்தராபுரம், புரூக்பீல்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆனந்தாஸ் உணவகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமல்லாது ஸ்ரீ ஆனந்தாஸ் குழுமத்தின் இயக்குனர்கள் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடுகள் என 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…