கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்… உக்கடம் பகுதியில் 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 12:43 pm

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக NIA அதிகாரிகள் காவலில் எடுத்துள்ள 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து உக்கடம், கோட்டைமேடு பகுதிகளில் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் பிஆர்எஸ் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஐந்து பேரையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் உக்கடம், கோட்டைமேடு இடங்களுக்கு இரண்டாவது நாளாக நேரில் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உக்கடம், ஜிஎம் நகர், அன்பு நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகியோரை நேரில் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!