தனியார் பள்ளி மாணவர்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல் : பள்ளி மாணவனின் மண்டையை உடைத்ததால் பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 1:19 pm

தனியார் பள்ளி மாணவர்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல் : பள்ளி மாணவனின் மண்டையை உடைத்ததால் பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் இயங்கி தனியார் பள்ளி மாணவர்களுக்கும் கோனேரிக்குப்பத்தில் இயங்கி வரக்கூடிய தனியார் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிப்பதில் பிரச்ச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் பள்ளி வகுப்பினை முடித்துவிட்டு வந்த மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் திண்டிவனம் ராஜாஜி சாலையிலுள்ள பிரபலமான பாத்திரக்கடை முன் தடியை கையில் கொண்டு வந்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர்.

இதில் கல்லூரி மாணவரின் மண்டை உடையவே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சக மாணவர்கள் சேர்த்துள்ளனர். பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!