பள்ளி மாணவியை கடத்திய கட்டிட மேஸ்திரி… பெண் நீதிபதி போட்ட சூப்பர் தண்டனை.. மக்கள் பாராட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2025, 11:54 am

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியை சேர்ந்தவர் சந்தானகுமார் 31. கடடிட மேஸ்திரி. இவர் 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்தார்.

இதையும் படியுங்க: மூட்டை மூட்டையாக காலாவதியான மருந்துகள்… கோவை 15வது வார்டில் மர்மம்? காங்., கவுன்சிலர் பரபரப்பு புகார்!

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை 2017 அன்று கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சந்தானகுமாரை கைது செய்து போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

construction foreman arrest after kidnapped a schoolgirl and harassed

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சுதா மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 10 ஆணடுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கடத்திய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!