லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கும் காவலர்கள்.. மதுவிலக்கு சோதனைச்சாவடியில் ஷாக்.. VIRAL VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2024, 11:58 am

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே புதுச்சேரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மொராட்டாண்டி சுங்கச்சாவடி.

இந்த சுங்கச்சாவடி அருகே விழுப்புரம் மாவட்டம் காவல் துறையின் மதுவிலக்கு சோதனை சாவடி அமைந்துள்ளது இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கர் கேட்ட ஜாமீன்… வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல் : நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

இந்நிலையில் நேற்று இரவு அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களுக்கு மதுவிலக்கு சோதனைச் சாவடியில் உள்ள போலீசார் கனரக வாகனங்களை வழிமடக்கி லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…