மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி தனக்கு தானே சூனியம்.. திமுக இனி 10 ஆண்டு ஆட்சிக்கு வராது!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2025, 1:45 pm

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது, முதல்வர் வருகிறார் என்றால் போக்குவரத்து நிறுத்தம் செய்வது சகஜம் தானே., முதல்வர் வருகைக்காக 3 மணி நேர போக்குவரத்து தடை செய்தும் நடந்து செல்பவர்கள் கூட முதல்வரை காண வரவில்லை. முதல்வர் சுட்டிக்காட்டும் இடங்களில் மாவட்டம் செயல்படும், 10 தொகுதியில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறுகிறார். வாயில் வேண்டுமானால் சொல்லலாம்.! ஆனால் மக்கள் நினைக்க வேண்டுமே.? மக்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள்., முதல்வர் ரோடு இன்னொரு சித்திரை திருவிழாவாக மாறியிருக்கும்.! ரோடுஷோ-விற்கு செயற்கையாக மக்கள் கூட்டப்பட்ட கூட்டம்., தானா சேர்ந்த கூட்டம் அல்ல., கூட்டமும் அந்த அளவு இல்லை., மக்களுக்கான திட்டத்தை கொடுங்கள். திட்டங்கள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க நான் தயார் என்றார்.

இதையும் படியுங்க: பாதிக்கப்பட்ட மாணவி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… ஞானசேகரனுக்கு ஆயுள் வழங்கியதற்கு ஜோதிமணி வரவேற்பு!

முதல்வர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறாரு.! அவர் சென்னை கூவம் கால்வாயை பார்த்ததே இல்லையா.? மதுரக்காரங்க எது செஞ்சாலும் வித்தியாசமா செஞ்சுறாங்க.! மதுரையில சாலைகள் குண்டும், குழியுமான உள்ளது அதுல நம்ம நடக்கிறோம்., நடந்து சென்றால் கூட வரி விதிக்கும் அளவுக்கு வரி மேல் வரி போட்டு வரி அரசு காட்டுகிறோம். சொகுசு காரில் வரும் முதலமைச்சர் வரும்போது மட்டும் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.

பந்தல்குடி கால்வாயை பொருத்தவரை ஒருபுறம் இஸ்லாமியர்களும், மற்றொருபுறம் பட்டியலினமக்களும் இரவு பகலாக வாழ்கிறார்கள். பந்தல்குடி கால்வாயில் திரை அமைத்தது குறித்து நான் விமர்சனம் செய்தேன். என்னை திமுகவினர் விமர்சனம் செய்தார்கள்.! தெர்மாகோல் விஞ்ஞானியே நீ என்ன செய்தாய் என குறிப்பிட்டிருந்தார்கள்.! எங்க காலத்தில் சாக்கடை நீரை உறிஞ்சி சுத்தம் செய்வதற்கு 2 1/2 கோடி மதிப்பீட்டில் மறுசுழற்சி செய்து சாக்கடை நீர் தேங்காத அளவிற்கு., மழைநீர் மட்டும் செல்வதற்கு வழிவகை செய்து கழிவுநீர் வைகையில் கலக்காத வகையில் ஏற்பாடு செய்தோம்.

ஆட்சி மாற்றம் ஆன பிறகு மேம்பாலம் கட்டுவதற்காக இரண்டரை கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மறுசுழற்சி திட்டத்தை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் பந்தல்குடி கால்வாய் சாக்கடையை பார்த்து விடக்கூடாது என திரைசீலைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அலங்கார தோரணம் கட்டுனாங்க பாருங்க எத்தனை கிலோமீட்டர் யப்பா….? இதைப் பார்த்த விசிக போராட்டம் நடத்தி நாங்க பல வருடமா இங்கதான் வாழ்கிறோம் என சண்டை போட்ட பிறகு அகற்றினார்கள்.

திரைச்சீலைகள் அமைக்கப்பட்டதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு விளக்கம் கொடுத்தாங்க பாரு..? ஒரே போடா போட்டாங்க….! யாரு கட்டுனார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று.! இது மாதிரியான ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரை நான் பார்த்ததே இல்லை.! இப்படிப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மதுரைக்கு கிடைத்திருக்கிறார்.!

DMK will not come to power for another 10 years

எதிர்க்கட்சி என்றால் பேசத் தானே செய்வார்கள். அதைவிட ஒரு சுவாரஸ்ய நிகழ்வு இருக்கு ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் திமுகவிற்கு இருக்கு. அதற்கான ஒரு சான்று., மதுரையில் பொதுக்குழு கூட்டினால் எப்பவும் வந்ததில்லை., கலைஞர் இருந்த போதும் வந்ததில்லை. திமுகவில் தலைவர் எம் ஜி ஆர் இருந்தவரை ஆட்சிக்கு வந்தார்கள்.! திமுகவை விட்டு எம்ஜிஆர் வெளியே வந்த பிறகு 2வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை.!

மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. 1977 இல் நடந்த பொதுக்குழு அதன் பிறகு 12 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தான்.! திமுகவிற்கு வனவாசம் தான். இதனால் தான் மதுரைக்காரர்கள் என்றாலே திமுக தலைமைக்கு பிடிக்காது., யாரோ சொல்லி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக் கோப்பை வாங்கியதாக மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை ஏமாற்றியது., போல பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள். திமுகவின் பொதுக்குழுவில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் இருப்பதை நேற்றுதான் பா பார்த்தேன். மதுரையில் பொதுக்குழு நடத்தி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட திமுக இனிமேல் 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. கலைஞர் எதோ தத்தி தத்தி கட்சியை வழிநடத்தினர்., முதல்வர் ஏதோ அதிமுக பொதுச் செயலாளர் திட்டுகிறார். திட்டதிட்ட திண்டுக்கல்லுப்பா நாங்க., எங்க பொதுச் செயலாளர் அவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கிறார்.

  • tvk vijay issue certificate to students who scored good marks in public exam second session in going on எந்த வித சலசலப்பும் இல்லாமல் நடைபெற்ற தவெகவின் இரண்டாம் கட்ட கல்வி விருது விழா! என்னப்பா  இது?
  • Leave a Reply