செந்தில்பாலாஜி இல்லாவிட்டாலும் கரூரில் திமுக வெற்றி பெறும் : திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2024, 5:58 pm

செந்தில்பாலாஜி இல்லாவிட்டாலும் கரூரில் திமுக வெற்றி பெறும் : திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு!

கரூர் மாநகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் என்ற தலைப்பில் தளபதி பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் கரூர் 80 அடி சாலையில் கரூர் மாநகர கழகச் செயலாளர் எஸ் பி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தலைமை கழக பேச்சாளர் பொதுமக்களிடையே பேசுகையில் வருங்காலத்தில் ஆளப்போகும் முதல்வர் இருக்கிறார் என்று சொன்னால் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் என்றாலும் சிறைச்சாலை என்றாலும் குடும்பத்தோடு செல்வதால் நீங்கள் குடும்ப கட்சி என்று சொல்கிறீர்கள் தாங்கள் குடும்பமாக தான் இருக்கிறோம்

ஜாதியை சொல்கிறார் மதத்தை சொல்கிறார் கோயிலுக்கு விரோதி என்று 1450 கோயில்களுக்கு புறணம் வைத்து கும்பாபிஷேகம் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் 1952 லேயே நாங்கள் ஆண்டவனுக்கு விரோதி இல்லை என்று சொல்லிவிட்டோம்

கோயில் கூடாது என்பது எங்கள் கொள்கை அல்ல கோயில் கொள்ளை அவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை

பூசாரியை தாக்கினேன் பக்தர் என்பதற்காக அல்ல பக்தி பகல் தேசமாகிவிடக்கூடாது என்பதற்காக 1952 ஆம் ஆண்டு சொல்லி விட்டோம் இன்னும் அதே பல்லவையே பாடி வருகின்றனர்

தேர்தலில் வாக்குறுதியை சொல்லி வாக்கு கேட்கிறோம் பத்தாண்டு காலம் பிஜேபி ஆட்சியில் இருந்தது திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்தோம் என்று சொல்லுகின்றம் தென்பும் திராணியும் நரேந்திர மோடிக்கு இல்லை என்றால் ஓடிவிடு திமுகவை ஒழிப்போம் என்று பூச்சாண்டி வேலை காட்ட வேண்டும் கலைஞருடைய பேரன் உதயநிதி ஸ்டாலின் சொல்லிவிட்டார்

ஆண்மை இருக்கிறது வாரிசு இருக்கிறது இல்லையென்றால் மருத்துவமனைக்கு செல் சீப்பை ஒழித்து விட்டால் திருமணம் நின்று விடுமா கரூரில் செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்து விட்டால் கரூர் தொகுதியில் நீங்கள் பாஜக வெற்றி முடியுமா?

செந்தில் பாலாஜி இல்லாவிட்டாலும் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் அதுதான் செந்தில் பாலாஜிக்கு பெருமை என்று தெரிவித்தார்.

  • michael rayappan character was inspired from original character said by atlee ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ