அதிகாலையிலேயே புகுந்த அமலாக்கத்துறை… டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சிக்கும் உயரதிகாரிகள்?
Author: Udayachandran RadhaKrishnan16 May 2025, 11:05 am
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பாக இன்று அதிகாலை சென்னையில் தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, திகநகர், சூளைமேடு, மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணப்பாககம் சிஆர் புரம் பகுதியில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல திருவல்லிக்கேணியில் உள்ள தேவக்குமார் என்ற தொழிலதிபர் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது.

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. உதயநிதியின் நெருங்கிய நண்பர் ஆகாஷ். அண்மையில் இவரின் திருமணம் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது.

மேலும் இவர் பராசக்தி, இட்லி கடை, சிம்பு நடிக்கும் STR 49 போன்ற படங்களை தயாரித்து வருகிறார். 1000 கோடி முறைகேடு தொர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது,