வலசை போதலால் தடம் மாறிய யானைகள் : கோவை தடாகம் பகுதியில் தண்ணீர் அருந்திய வீடியோ வைரல்!!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2021, 12:37 pm
கோவை : வலசை போதலால் பாதை மாறிய யானைகள் தடாகம் பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில் அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் மலையிலிருந்து இறங்கி கணுவாய், தடாகம், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குச் சென்று உணவு உட்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் மூன்று காட்டு யானைகள் தங்கள் வலசைப்பாதை மாறி நேற்று இரவு மலையின் கீழே இறங்கி உள்ளன. இந்த யானைகள் தடாகம் வீரபாண்டி பகுதியில் தற்போது முகாமிட்டு உள்ளன.
மேலும் காட்டுப்பகுதியில் ஒட்டியுள்ள தொட்டிகளில் தண்ணீர் குடித்த காட்சிகளை அங்குள்ளவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் யானைகளை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்து வருகின்றனர்.
0
0