இடைக்கால பொதுச்செயலாளரான பின் மதுரைக்கு முதல்முறை பயணம் : இபிஎஸ்க்கு ஆளுயர மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 10:40 am

விருதுநகரில் அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்தடைந்தார்.

விருதுநகரில் அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமான மூலமாக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மதுரை வந்த அவருக்கு மதுரை விமான நிலையத்தில் ஆளுயர மாலை அணிவித்து மேலைத்தளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த ராஜ் சத்யன் உள்ளிட்டோரும் சிறப்பான வரவேற்பு வழங்கினார்கள்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!