நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் தியானம்.. இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி வழிபாடு!!
Author: Udayachandran RadhaKrishnan16 June 2025, 11:54 am
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்க: எனக்கும் காவ்யா மாறனுக்கும் காதல்? திருமணம் குறித்து முதன்முதலாக வாய் திறந்த அனிருத்!
அதிமுக மீண்டும் பாஜவுடன் கூட்டணி அமைதது தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த முறை அதிமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது.

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானம் செய்தது கவனத்தை பெற்றுள்ளது.

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தார். இதன்பின் தியானத்தில் ஈடுபட்டார்.
