4 வருடமாக ஜாலியாக கள்ளக்காதலனுடன் உல்லாசம் : மனைவியை பார்கக ஆசை ஆசையாக வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: kavin kumar
27 February 2022, 7:54 pm

கடலூர் : காட்டுமன்னார்கோவில் அருகே கள்ள காதல் விவகாரத்தில் கணவனை மனைவி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிபாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா(42). இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அனிதா(35). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா – அனிதா இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அனிதா தனது சொந்த ஊரான தஞ்சை அருகே உள்ள நெய்வாசல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை பார்க்க இளையராஜா நெய்வாசலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அனிதா வீட்டின் பின்புறத்தில் உடல் கிடந்துள்ளது. இதன் பிறகு, போலீசார் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், இளையராஜாவின் மனைவி அனிதாவை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அனிதா தான் இளையராஜாவை கள்ளகாதலுக்காக கொலை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக அனிதா போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறியது:- இளையராஜாவின் சித்தப்பா மகன் ஜெயபால்(30) என்பவருக்கும், அனிதாவுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் அனிதா வீட்டுக்கு வந்த இளையராஜாவை அனிதாவும், ஜெயபாலும் அம்மிக்கல்லால் கொடூரமாக அடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனிதாவை கைது செய்ய போலீசார், ஜெய்பாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?