மருமகனுடன் உல்லாசமாக இருந்த அத்தை.. குப்பை மேட்டில் கிடந்த சடலம் : தூக்கி வாரிப்போடும் சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2025, 4:56 pm
இன்றைய காலத்தில் முறைதவறிய காதலால் ஏற்படும் தற்கொலை, கொலைகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. அப்படி நடந்த ஒரு திகில் சம்பவம் தான் இது.
கர்நாடகாவில் கமசாகா கிராமத்தில் வசித்து வந்த சுப்பிரமணியா (62) என்பவருக்கு மீனாட்சி (வயது 55) என்ற மனைவி உள்ளார்.
இதையும் படியுங்க: தனியார் விடுதியில் 32 வயதே ஆன ராணுவ வீரர் சடலமாக மீட்பு.. இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கடந்த சில நாட்களுக்கு முன் சுப்பிரமணியாக காணாமல் போனார். இது குறித்து மனைவி மீனாட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியாவை தேடி வந்த போலீசார், கடந்த 8ஆம் தேதி அந்த கிராமத்தில் உள் ளகுப்பை கொட்டும் இடத்தில் ஆண் சடலத்தை கைப்பற்றினர்.
விசாரணையில் அது காணாமல் போன சுப்பிரமணியாவின் உடல் என்பது தெரியவந்தது. பின்னர் மீனாட்சியை அழைத்து போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
மீனாட்சிக்கும், அவர் வீட்டில் கட்டிட வேலை செய்ய வந்த பிரதீப் ஆச்சாரி என்ற 32 வயது இளைஞருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது ஒருநாள் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் சுப்பிரமணியா இருவரையும் எச்சரித்துள்ளனர்.
மேலும் அந்த இளைஞர் பிரதீப் ஆச்சாரி, சுப்பிரமணியாவின் சொந்த தங்கை மகன் ஆகிறார். இதையடுத்து சுப்பிரமணியாவை தீர்த்துக்கட்ட கூலிப்படை சேர்ந்த சித்தேஷ் மற்றும் விஷ்வாஷ் ஆகியோருக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
அவர்கள் சுப்பிரமணியாவை தனியாக அழைத்து கழுத்தை நெறித்து கொலை செய்து பின்னர் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் 3 பேரை கைது செய்து விசாரதணை நடத்தி வருகின்றனர். 55 வயதில் சபல புத்தியால் தாலி கட்டிய கணவனையே கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.