கோவையில் காவலர் என மிரட்டி வசூல் வேட்டை : பாஜக பிரமுகர் அதிரடி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 8:12 pm

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெருமாள். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு தலைமை காவலராக பணியாற்றி வந்து உள்ளார்.

மேலும் பா.ஜ.க முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவராக இருந்து உள்ளார். இவர் பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எனக் கூறி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பேரூர் படித்துறை அருகே உள்ள அரசு மதுபான டாஸ்மார்க் கடையில் அருகே உள்ள பெட்டிக் கடை வைத்து உள்ள வெற்றிவேல் (எ) சுரேந்திரன் என்பவரிடம் குட்கா விற்பனை செய்வதாக பொய் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டி பணம் ரூபாய் 15,000 பறித்துக் கொண்டு அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு உக்கடம் காவல் நிலையம் முன்பு இறக்கிவிட்டு சென்று உள்ளார்.

இந்நிலையில் வெற்றிவேல் பேரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…