கோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan8 August 2021, 7:49 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 2 ஆயிரத்தை நெருங்கியே உள்ளது.
கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது.
இன்றும் 2,000-ஐ நெருங்கிய பாதிப்புகளே இருந்து வருகின்றன. அதாவது, 1,956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,75,308ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, கோவையில் இன்று 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 187 பேருக்கும், செங்கல்பட்டுவில் 105 பேருக்கும், ஈரோட்டில் 185 பேருக்கும், தஞ்சையில் 97 பேருக்கும் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,317ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,807 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 20ஆயிரத்து 584ஆக அதிகரித்துள்ளது.
0
0