சூப்பர்-னு சொல்ல முடியலைனாலும்… ஓகே தான்… இந்திய பங்குச்சந்தைகளால் ; முதலீட்டாளர்கள் நிம்மதி..!!

Author: Babu Lakshmanan
8 November 2023, 12:59 pm

சூப்பர்-னு சொல்ல முடியலைனாலும்… ஓகே தான்… இந்திய பங்குச்சந்தைகளால் ; முதலீட்டாளர்கள் நிம்மதி..!!

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. ஆனால் இந்த வாரத்தின் ஏற்றம் இறக்கத்துடன் பங்குச்சந்தைகள் காணப்பட்டு வந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.

அதன்படி, இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 26 புள்ளிகள் உயர்ந்து 64,698 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 30 புள்ளிகள் அதிகரித்து 19,437 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

BPCL, Adani Ports, Asian Paints, Cipla, Titan Company போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. ICICI Bank, NTPC, Appollo Hospital, Power Grid Corp, Tata Steel போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.50 புள்ளிகள் உயர்ந்து 77.30 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 43.00 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.05 புள்ளிகள் உயர்ந்து 19.60 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 11.50 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!