கர்நாடகா மது பாட்டிலுக்கு மவுசு? ஜோராக நடந்த கடத்தல் : தட்டி தூக்கிய போலீஸ்.!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2025, 1:32 pm

கோவை வடவள்ளி, வீரகேரளம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த குமரேசன், 57 என்பவர் குட்கா மற்றும் கர்நாடகா மது பாட்டில்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து லாரியில் மது பாட்டில்கள் வருவதாகத் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில், போலீசார் நீலம்பூர் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.

இதையும் படியுங்க: யாரு சொன்னா அப்டினு.. அஜித்துக்கு போன் போட்ட விஜய்.. காரணம் என்ன தெரியுமா?

அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றில், மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, லாரியில் இருந்த, 517 கர்நாடகா மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Karnataka Liquor Smuggleing

கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த ரங்கநாதன், 50, திருப்பூரைச் சேர்ந்த சதீஷ்பாபு, 43 மற்றும் பீகாரைச் சேர்ந்த விஷ்வநாத் குமார், 20 ஆகியோரை கைது செய்தனர்.

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!