எனக்கும் முதல்வருக்கும், அண்ணன், தங்கைக்குள் ஏற்படுகிற பிரச்சனை… பேசி தீர்த்துக்கொள்வோம் : ஆளுநர் தமிழிசை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2022, 7:56 pm

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரியில் புதுமையான ஆட்சி நடக்கிறது. கவர்னருக்கும் முதலமைச்சருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

நான் யாரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கவில்லை. முதலமைச்சர் ரங்கசாமி மன உளைச்சலில் இருந்தால் அதை நேரடியாக பேசி தீர்த்துவைக்க தயாராக உள்ளேன்.

அண்ணன் ரங்கசாமி ஏன் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதைக் கேட்டு, பிரச்னை இருந்தால் அதை அதிகாரிகளுடன் அமர்ந்து பேசி தீர்த்து வைப்பேன்.

நாளை அதிகாரிகளையும், முதலமைச்சரையும் அழைத்து அமர்ந்து பேசி காலதாமதத்தை சரி செய்து விடுவோம். இது ஒரு சகோதர சகோதரிக்குள் ஏற்படுகிற பிரச்னைதான்.

யாரையும் மன உளைச்சலில் இருக்க வைக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை. முதலமைச்சர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

மாநில அந்தஸ்தில் என்னென்ன நல்லது நடக்குமோ அது தற்போதும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!