ஓரணியில் தமிழ்நாடு; முட்டுக்கட்டை போட்ட நீதிமன்றம்? OTP விவகாரத்தில் அதிரடி உத்தரவு

Author: Prasad
21 July 2025, 2:33 pm

சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திமுகவினர் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். 

Madurai high court banned on obtaining otp from public

இந்த உறுப்பினர் சேர்க்கையில் பொது மக்களிடம் ஆதார் தகவல்களை சேகரித்து OTP பெற்று உறுப்பினராக சேர்க்கப்படுகின்றனர்.  இவ்வாறு பொதுமக்களிடம் ஆதார் தகவல்கள் பெற்று OTP பெறப்படுவது தனி மனித உரிமையை பாதிப்புக்குள்ளாக்குவதாகவும் பொது மக்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க திமுகவினருக்கு தடை விதிக்க கோரியும் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

Madurai high court banned on obtaining otp from public

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தலாம், ஆனால் OTP கேட்கக்கூடாது என்று கூறி திமுகவினர் பொதுமக்களிடம் OTP பெற தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்  இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!