‘நீ மருந்து கொடுத்து நாங்க வாழனுமா..?’… பட்டியலின சுகாதாரப் பெண் பணியாளர் மீது தாக்குதல்… கணவரின் மண்டை உடைப்பு..!!

Author: Babu Lakshmanan
5 January 2024, 7:01 pm

அங்கன்வாடி மையம் முன்பு பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கிய பட்டியலின சுகாதாரப் பெண் பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ; மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி கிராமத்தில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் சேக்கிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக தன்னார்வ சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தனலட்சுமி அவரது கணவருடன் சேக்கிபட்டி ஊராட்சியில் உள்ள உடப்பன்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் முன்பு மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த (மாற்று சமுதாயம் ) அழகன் என்பவர் தனலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அநாகரிகமாக பேசியுள்ளார். அப்போது ,இதனை அருகில் இருந்த அவரது கணவர் செந்தில் தடுக்க முற்பட்டபோது, கட்டையால் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். பின் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தனலட்சுமிக்கு கையில் காயமும் அவரது கணவர் செந்திலுக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தனலட்சுமி மேலவளவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அழகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!